உங்களுக்கு வாழ்க்கையில் தொலைந்து விட்ட உணர்வா? உங்கள் உணர்வுகள் சில நேரம் உங்களை அடக்குகின்றனவா? கெட்டவை ஏன் ஏற்படுகின்றன என்ற வியப்பா?
பல்வேறு பின்னணி கொண்ட வாசகர்களுக்காக எழுதப்பட்ட இப்புத்தகம், எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிவயப்பட்ட பயணத்தின் நோக்கத்தை உள-ஆத்ம கண்ணோட்டத்துடன் அலசி, "நான் ஏன் இங்கு இருக்கிறேன்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க எங்களை உதவுகிறது. வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளை நாம் அனுபவிக்கும் பொழுது, அவைகளின் தவிர்க்க முடியாத ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து, இது உயிர் வாழ வழிகாட்டும் ஒரு சிறந்த கையேடு. மருத்துவ உளவியல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல், அனுபவமும் நுட்ப சிகிச்சை முறை நுண்ணறிவும் பெற்று தனது சுயசரிதைப் பயணத்தின் அடிப்படையில் டாக்டர் லின்டல், உங்கள் வாழ்க்கையை வேறுவித விழியாடியால் நோக்க உங்களை அழைக்கிறார். இதன் ஒரு பகுதியை புனைப்பாக இயற்றி, சுய ஆராய்ச்சியும் அறிவாற்றலும் பெற, அவர் புகட்டும் போதனைகள் வாழ்க்கையில் உங்கள் இருத்தலின் நோக்கத்தை அறிந்து கொள்ள சிறந்த முறையில் உதவி அளிக்கும்.